28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். மழை வெள்ளம் நீடிப்பதால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராமராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 1908 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மழை நீடிப்பதாலும், மேலும் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அடுத்து வரும் 2 நாள்களில் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களில் தங்கச் செய்துவிடுவோம்.

இதன் மூலம் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஹைதராபாத் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உயிரிழந்த 33 பேரில் 29 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநகரில் எந்தந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்தந்த காலனி பகுதிகள் வசிப்பவர்களை வீடு வீடாகச் சென்று அவர்களை வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைப்போம். ஓரிரு தினங்களுக்குள் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிவிடுவோம்.

அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால், மாநில அரசு, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எஃப்) உடன் ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் ராமராவ்.

கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு நூற்றாண்டு கால அளவில் கண்டிராத அளவு மழை கடந்த வாரத்தில் பெய்துள்ளது.

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...