31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மஸ்கெலியாவில் நான்கு மாதக் குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா

மஸ்கெலியாவில் நான்கு மாதக் குழந்தை உட்பட 7 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முடிவின் பின் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தாய் மற்றும் தந்தை, அவர்களுடன் தொடர்புடைய நான்கு பேர் உள்ளடங்குவதாக மஸ்கெலிய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் மஸ்கெலியா காட்மோர் பகுதியில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles