வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாசிடோனியாவின் கிழக்கு நகரமான கோக்கானியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் பாப் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியின் போது அதிகாலை 2.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி வந்த பார்வையாளர்கள் பட்டாசுகளை வெடித்ததால் தீப்பிடித்துள்ளது என தெரியவந்துள்ளது.