மின்சார சட்டமூலத்தில் திருத்தம் – மக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு

0
9

உத்தேச மின்சார சட்டமூலத்தில் கொண்டுவரப்படும் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மக்கள் தங்களது யோசனைகளை இலக்கம் 434 காலி வீதி கொழும்பு 03 என்ற முகவரியில் அமைந்துள்ள மின்சக்தி அமைச்சுக்கு குறிப்பிட்ட திகதிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரச் சட்டத்தில் திருத்தம் தொடர்பான தகவல்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை powermin.gov.lk என்ற இணையதளம் மூலம் பார்வையிட முடியும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.