முடிவின்றி தொடரும் தினேஷ் ஷாப்டரின் மரண விசாரணைகள்

0
90

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் உத்தரவு பிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் மீண்டும் விசாரணையை தொடர நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.