முல்லைத்தீவில் மின்மாற்றி வயர் திருட்டு!

0
111

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில், இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியில் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர், இன்று அதிகாலை 2.00 மணியளவில், களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனால், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு கிராமத்திற்கான மின்சாரம், இன்று அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.30 மணி வரை துண்டிக்கப்பட்டது.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர், காலை 6.30 மணிக்கு, மீண்டும் மின் இணைப்பை மேற்கொண்டனர்.
இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தில், மின்சார சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர், முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபை மின் அத்தியட்சகர், மின்சார சபை ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதன் போது, புவித்தொடுப்பு வயரை களவாட பயன்படுத்தப்பட்ட, இரண்டு கத்திகள் கைப்பற்றப்பட்டன.