மேலும் 4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்!

0
123

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி இதுவரை 129 இலங்கையர்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயமாலினி (50) அவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுசிக (19) ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
தமிழகம் சென்ற அவர்கள், தாமாகவே ஆட்டோ மூலம் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்களிடம் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.