யாழில் வடக்கு கிழக்கு மீனவர் கூட்டு இளையோர் கலந்துரையாடல்!

0
84

வடக்கு கிழக்கு மீனவர் கூட்டு இளையோர் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

கடல் வளத்தை பாதுகாத்தல் மற்றும் மற்றும் மீனவர்களுக்கு எதிரான பிரச்சினைகளை எதிர்காலத்தில் ஒன்றாக ஒருமித்த ஒரே குரலாக ஓங்கி ஒலிப்பதற்கும் அவர்களை வலுப்படுத்தி ஒன்றிணைத்தலை நோக்காக கொண்டு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

நிறுவனத் தலைவர் யாட்சன் பிகிராடோ தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் இரணியஸ்லஸ் செல்வின் மற்றும் அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா உள்ளிட்ட வடக்கு கிழக்கை சேர்நத 09 மாவட்டங்களைச சேர்ந்த இளம் மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.