28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 28ம் திகதி திறந்து வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது!

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய தினத்தில் மிகவும் எளிமையான முறையில் இந்த திறப்பு விழா செய்யப்படவுள்ளதுடன் காணொளி முறையில் திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் இந்த தகவலை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாத நிலையில் அதனை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தற்போது திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles