30 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடகொரிய ஜனாதிபதி இந்த மாதம் ரஷ்யாவுக்கு பயணம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக வடகொரிய அதிபர் கிம் பியோங்யாங்கில் இருந்து கவச ரயிலில் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சந்திப்பு இடம்பெறும் இடம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

உக்ரைனுக்கு எதிரான போருக்காக ரஷ்யாவுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்க வடகொரியா தயாராகி வருவதாக அண்மையில் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த இரண்டு நாடுகளினதும் தலைவர்களின் சந்திப்பு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வடகொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது

மஸ்கெலியா  - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் 5 மைதானங்களில் இளையோர் உலகக் கிண்ணம்

எதிர்வரும் ஜனவரி 13 தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து மைதானங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது

மஸ்கெலியா  - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் 5 மைதானங்களில் இளையோர் உலகக் கிண்ணம்

எதிர்வரும் ஜனவரி 13 தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து மைதானங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த...

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாரையும் தாக்கி காயப்படுத்த வேண்டாம் – பொலிஸில் முறையிடுங்கள்

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...