யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசனின் ஏற்பாட்டில், 25 குடும்பங்களுக்கான அத்தியாவசிய நிவாரண பொதி வழங்கும் நிகழ்வு, மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில், இன்று இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, லண்டனை சேர்ந்த புலம்பெயர் தேசத்தவரான ராஜ்குமாரின் நிதிப் பங்களிப்பில், தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களும் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் முகமாக, தவிசாளரால், 10 கிலோ கிராம் சேதன பசளையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், வலி. தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வலிகாமம் தென் மேற்கு பிரதேசத்தில் 25 குடும்பங்களுக்கு, நிவாரண உதவி
0
119