24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலி.வடக்கு , கட்டுப்பிட்டி இந்து மயானத்தினை புனரமைக்க கோரிக்கை!

வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட கட்டுவன் வீதியில் உள்ள கட்டுப்பிட்டி இந்து மயானத்தினை சம்பந்தப்பட்ட தரப்பினர் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 சித்தியம்புளியடி, கோயிற்புலம், பெரியபுலம்,  வண்ணமாதரை, கிளானை, சாத்தனாவத்தை, மகாதனை, சிங்காவத்தை, களவட்டாவத்தை, துர்க்காபுரம், தொந்தனை,கோட்டைக்காடு,மற்றும் மல்லாகத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவுகளின் தகனக்கிரியைகளை மேற்கொள்வது இந்ந இந்து மயானத்தில் ஆகும். அண்ணளவாக 10 பரப்பு கொள்ளளவைக் கொண்ட மேற்படி இந்து மயானத்தில்  பற்றைக் காடுகளும், பாதீனியச் செடிகளும் சூழ்ந்து காணப்படும் அதே வேளை, மாயான மண்டபத்தின் ஒரு பகுதி கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது.

 அத்தோடு இந்த மயானத்துக்கு உரிய கிணறு பாவிக்க முடியாத நிலையில் உள்ளது அத்தோடு  மயானத்தில் ஒரு வைரவர் ஆலயம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு மின்சார வசதி இல்லாத நிலையும்  சுட்டிக்காட்டத் தக்கது  இறந்த உடலை தகனம் செய்வதற்கான கட்டணத்தை  வலி.வடக்கு பிரதேச சபை அறவிடுகின்றது. எனவே வலி.வடக்கு பிரதேச சபை, இப் பகுதியை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்படி மயானத்தின் புனிதத் தன்மையை பேணும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...