26.9 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலி.வடக்கு , கட்டுப்பிட்டி இந்து மயானத்தினை புனரமைக்க கோரிக்கை!

வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட கட்டுவன் வீதியில் உள்ள கட்டுப்பிட்டி இந்து மயானத்தினை சம்பந்தப்பட்ட தரப்பினர் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 சித்தியம்புளியடி, கோயிற்புலம், பெரியபுலம்,  வண்ணமாதரை, கிளானை, சாத்தனாவத்தை, மகாதனை, சிங்காவத்தை, களவட்டாவத்தை, துர்க்காபுரம், தொந்தனை,கோட்டைக்காடு,மற்றும் மல்லாகத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவுகளின் தகனக்கிரியைகளை மேற்கொள்வது இந்ந இந்து மயானத்தில் ஆகும். அண்ணளவாக 10 பரப்பு கொள்ளளவைக் கொண்ட மேற்படி இந்து மயானத்தில்  பற்றைக் காடுகளும், பாதீனியச் செடிகளும் சூழ்ந்து காணப்படும் அதே வேளை, மாயான மண்டபத்தின் ஒரு பகுதி கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது.

 அத்தோடு இந்த மயானத்துக்கு உரிய கிணறு பாவிக்க முடியாத நிலையில் உள்ளது அத்தோடு  மயானத்தில் ஒரு வைரவர் ஆலயம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு மின்சார வசதி இல்லாத நிலையும்  சுட்டிக்காட்டத் தக்கது  இறந்த உடலை தகனம் செய்வதற்கான கட்டணத்தை  வலி.வடக்கு பிரதேச சபை அறவிடுகின்றது. எனவே வலி.வடக்கு பிரதேச சபை, இப் பகுதியை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்படி மயானத்தின் புனிதத் தன்மையை பேணும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...