31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் விசேட திருப்பலி வழிபாடு

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியா கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட திருப்பலி வழி;பாடு இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை அருட்திரு.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் இவ் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல, காவற்துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles