மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடம் 10 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் மீளவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.