வீதிகளில் நடமாடிய கட்டாக்காலிகளை மடக்கிப் பிடித்த வவுனியா நகரசபை!

0
223

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது.

நேற்றையதினம் இரவு வவுனியா பண்டாரிக்குளம் மற்றும் வைரவர் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி, மாடுகளை மீள பெற்றுக்கொள்ளமுடியும் என நகர சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.