வெற்றிலைக்கேணி விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
225

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகச்சந்திரன் பிரகலதன் என்பவரே உயிரிழந்தவராவர்.