27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெள்ளப் பெருக்கில் 20 போ் பலி

சீன தலைநகா் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கன மழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 போ் பலியாகினா்.

இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியதாவது : பெய்ஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் முழ்கின.

வீதிகளிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் 20 போ் பலியாகினா்; 27 போ் மாயமாகினா் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பெய்ஜிங் பிராந்தியத்தில் பொதுவாக மிதமாகவே மழை பெய்யும். அங்கு இந்த அளவுக்கு மழை பெய்து இத்தனை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மிகவும் அபூா்வமானதாகும் என்று கூறப்படுகிறது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles