கைது செய்யப்பட்டு சிஐடியின் தடுப்பிலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக்கட்டாவின் மனைவியை சர்வதேச பொலிஸாரின் ஊடாக கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு சந்தேக நபர்களும் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது ஹரக்கட்டா வெளிப்படுத்திய தகவலின்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவரது மனைவி சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுற்ளார்.