கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா ரத்வத்த பிரதேசத்தல், அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலத்தை மஹாவலி கங்கையிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சுமார் 40 -50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.