அதிகரித்துவரும் போதை வியாபாரிகளின் அட்டகாசம்!

0
94

புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் பகுதியில் போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் கிராமத்தில் அதிகரித்துவரும் போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி அப்பகுதி இளைஞர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இளைஞர்கள் மீது போதை வியாபாரிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களும் போதை வியாபாரிகளைத் தாக்கிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி கரம்பை உடப்பு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இரண்டு வாரத்திற்குள் போதை வியாபாரத்தை அவ்விடத்திலிருந்து நிறுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.