27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று நண்பகல் 12.30 மணியளவில் 4.64 மீற்றராக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இவ் நீர்மட்டம் 5.50 மீற்றர் வரை அதிகரிக்குமாயின் பெரும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.அதன் பிரகாரம் தற்போது குடோ கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளை நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles