அநுராதபுரம் – கலென்பிந்துனுவௌ வீதியில், அஸ்வயாபெத்தீவௌ மயானத்திற்கு அருகில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்த சிறிய ரக லொறியின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால், லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்தது.
இதனால், லொறியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், கலென்பிந்துனுவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.