நாட்டில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இன்று விஜயம் செய்தார்.பாரிய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை, புவக்பிட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

