அனைத்து அரசு, தனியார் வங்கிகளும் நாளை திறந்திருக்கும்

0
388

நாளை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் நாளை வணிகத்திற்காக திறக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13-14 திகதிகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு நாளை திங்கள்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசு அறிவித்தது.

இதற்கிடையில், தங்கள் அலுவலகங்களும் நாளை பொது மக்களின் சேவைக்காக திறக்கப்பட்டிருக்கும் என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.