ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள சகல வேலைத் திட்டங்களுக்கும், தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் ஜனாதிபதியுடன் கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.
இது விவாதம் செய்யும் காலம் அல்ல.
நாட்டுக்காக – மக்களுக்காக கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமே இது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவேண்டும்.
அப்போதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை விரைந்து காண முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.