அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 15 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 19 வயது இளைஞர்கள் இருவரும், 16 வயது சிறுவன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நியூ மெக்சிக்கோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.