அமெரிக்காவில் 20,000 அரச ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கை!

0
10

அமெரிக்காவின் உள்நாட்டு வருமான சேவைத் துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்பின்  அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில்  உள்ள உள்நாட்டு வருமான சேவைத் துறையின் தலைமை அலுவலகத்தில்   நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில ட்ரம்ப்  ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவின் பல்வேறு அரச துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் அமுலுக்கு வரும் எனவும்  வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றயும் குறிப்பிடத்தக்கது.