அமைச்சரின் சாரதி கொலை! மூவர் கைது!

0
151

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபரின் சகோதரரும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் களுபோவில போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் காமினி லொக்குகேயின் சாரதியான எபசிங்ககே கனிஷ்க (வயது 41) என்பவர் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் கெஸ்பேவவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து தாக்கிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஐ)