கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில், நபரொருவர் கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திம்புள – பத்தனை இராவணாகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டியிலுள்ள வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.