அமைச்சுப் பதவி கிடைத்தால் அதை மனதார ஏற்பேன்: நாமல்

0
148

அமைச்சுப் பதவி கிடைத்தால் நான் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் இனிமேல் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க முடியாது என எந்தச் சட்டத்திலும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் விலகினர். மே மாதம் 9 பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ஷவும், ஜூலை 13 கோட்டாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினர்.
இந்தநிலையில், மீண்டும் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை. அண்மையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதவி வழங்கப்பட்டது. அதில், சஷீந்திர ராஜபக்ஷவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது. மேலும் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதில், நாமல் ராஜபக்ஷவின் பெயரும் உள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ ‘எனக்கு எந்த அமைச்சுப் பதவி பொருத்தம் என்பதை ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நான் தீர்மானிக்க முடியாது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி.
எனவே, மீளவும் அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனூடாக மூவின மக்களுக்கும் மென்மேலும் சேவையாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.