அம்பலாந்தோட்டை கொலைச் சம்பவம்- 5 பேர் கைது!

0
44

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை, தங்கல்ல மற்றும் ஹங்கம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.