இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இணைந்து விநாயகபுரம் குருகுல ஆதீன சபா மண்டபத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை விழாவும் சமய சொற்பொழிவும் இன்று இடம்பெற்றது.
திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகளின் திருவுருவம் தாங்கிய பல்லாக்கு வீதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குருகுல ஆதீன வளாகத்தில் நந்திக் கொடி ஏற்றப்பட்டு குருமார்களால் வேதபாராயணத்துடன் மலர் தூபி தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.
திருநாவுக்கரசு சுவாமிகளின் வாழ்கை வரலாறு மற்றும் அற்புதங்கள் தொடர்பாக அதிதிகள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆகியோரால் சொற்பொழிவுள் இடம்பெற்று இருந்ததுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று இருந்தன.
இதன்போது இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தினால் திருநாவுக்கசு நாயனாரின் திருவுருவப்படம் வழங்கப்பட்டதுடன் குருகுல ஆதீனத்தினால் அப்பர் சுவாமிகள் பாடியருளிய திருவங்கமாலை கையேடு என்பனவும் நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டதுடன ;அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தில் அதன் பணிப்பாளர் கண.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக ஆலய குருமார்கள், பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்இ திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மாவட்ட பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச இந்து ஆலய நிருவாகிகள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் இந்து அமைப்புக்களின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.