ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்வை ஆதரிக்க, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில், இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஜனாதிபதி ரணிலை ஆதரித்து, உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டார்.