அம்பாறை பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகருக்கு தனி நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பெருமளவான ஐஸ் போதைப் பொருளுடன்
நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து இருபது இலட்சத்திற்கும் அதிக பெறமதியான ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா போதை பொருளும கைப்பற்றபட்டுள்ளதாக
அம்பாறை தலைமையக பொலிஸ்சார் தெரிவித்தனர்.
இவ் விசேட நடவடிக்கையில் போதைப்பொருளை பெற்று கொள்ள வந்த ஏழு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் அசேல கே.ஹேரத் தலைமையிலான குழுவினரே இக் கைது நடவடிக்கையினை
முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.