அம்பாறையில் ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளது

0
100

அம்பாறையில் ரிமால் புயல், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளமையால், மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

பெரிய நீலாவணை, கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் புயல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமையால், மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக, மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை சந்தைகளும் மீன்கள் இன்மையால் மூடிப்பட்டு காணப்படுகின்றன.