அம்பாறை அக்கரைப்பற்றில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு செயலமர்வு

0
128

அம்பாறை அக்கரைப்பற்று மருது விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான
செயலமர்வு நடாத்தப்பட்டது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட 11 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இச் செயலமர்வில் பங்கேற்றனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் பிரபல்ய ஆசிரியர்கள் விசேட பயிற்சிசெயலமர்வினை நடாத்திவைத்தனர்.

இதில் 400இற்கும் மேற்பட்ட அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
2023 ஆம் ஆண்டிற்கான புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.