அம்பாறை அறுகம்பே சம்பவம் தொடர்பில் இரகசிய அறிக்கை!

0
63

அம்பாறை அறுகம்பே சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான இரகசிய அறிக்கையை விசாரணை அதிகாரிகள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்தனர். அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையை பரிசீலித்த நீதவான் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்காலத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கியிருக்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பணியகம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.