சமுர்த்திஅபிவிருத்திதிணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக அம்பாறை ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு சமுர்த்தி வங்கிகளின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் விளையாட்டுவிழா அக்கரைப்பற்று அன்னைசாரதா வித்தியாலய உள்ளக விளையாட்டு மைதானத்திலும் ஆலையடிவேம்புதெற்கு வங்கியின் விளையாட்டு விழா பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றன.
சமுர்த்திமுகாமையாளர்களானஎஸ்.சுரேஸ்காந் மற்றும் கே.கவிதாஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் பிரதம அதிதியாக பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாகஉதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்துகொண்டார்.
நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன், சமுர்த்திமுகாமைத்துவபணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன், அன்னை சாரதா பாடசாலை அதிபர் கோமளம் துளசிநாதன், இலங்கை வங்கிமுகாமையாளர் பிரபாகரன் உள்ளிட்ட வங்கிகட்டுப்பாட்டு சபை நிர்வாகத்தினர், ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பொதுமக்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டுபோட்டிநிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
பாரம்பரிய கலாசார போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.