அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து இன்று இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவிய இரத்தத் தட்டுப்பாட்டையடுத்து, ஆலையடிவேம்புபிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில்
இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதேசசெயலாளர் உட்பட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் குருதிக்கொடையளித்தனர்.