அம்பாறை மாவட்ட இணைந்த கரங்கள் அமைப்பினால், கண்ணகிபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் திரு. தங்கராசா இராசநாதன் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே
கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சமூக ஆர்வலர் செல்வநாயகம், சமூக ஆர்வலர் நேசராசன், ஆசியர்கள், பெற்றோர்கள் மற்றும் இணைந்தகரங்கள் உறுப்பினர்களும்
நிகழ்வில் பங்கேற்றனர்.