பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக
அம்பாறை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர், 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் முன்னரும், கல்முனை பொலிஸ் பிரிவில், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய
முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.