தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அரச ஊழியர்களுக்கான நூறு மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
சுகாதார உதவியாளர் சந்திரபால பியந்த ஒழுங்கமைப்பில், வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜே.மதன் தலைமையில் வைத்தியசாலை
ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் தேவ அருள்,பிரதம இலிகிதர் றோசி சுகுமார், வளவாளர்களான சந்திரகுமாரி, ஆமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கள பயிற்சி நெறியில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் ஊழியர்கள் என 42 அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற ஊழியர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிங்கள பாரம்பரிய உணவு முறை சார்ந்த கண்காட்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.