அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

0
140

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.
கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளையில் கூட காட்டு யானைகளின் நடமாட்டம் கிராமத்தில் காணப்படுவதனால் இரவு வேளையில் நடமாடுவதற்கு கிராம மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கும் கிராமவாசிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.
கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை இக்கிராமத்தின் மேற்கு புறத்தில் கொட்டுவதால் அதனை உண்பதற்கு காட்டு யானைகள் வருவதாகவும் இங்கு குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.