அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வீதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகள், உரிய முறையில் அகற்றப்படாமையினால்,
கழிவுகளை உண்பதற்காக கட்டாக்காலி கால்நடைகள் உட்பிரவேசிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வீதிகளில் நடைபயணம் மேற்டிகொள்வோர் நாய்க்கடிக்கும் இலக்காகி வருகின்றனர்.
கழிவுகளை வீதிகளில் கால்நடைகள் பரப்பிச் செல்வதால், தூர்நாற்றமும் ஏற்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வீதி விபத்துக்களும் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், சமூகப் பொறுப்போடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.