பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய, 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும்
பயனாளிக்கே வீடு வழங்கப்படவுள்ளது.அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன கலந்துகொண்டார்.