அம்பாறை காரைதீவில் ‘நிலவின் கர்ப்பங்கள்’ எனும் கவிதைத்தொகுதி நூல் வெளியீடு

0
263

காரைதீவின் பழந்தமிழ் ஆசிரியர் அமரர் நல்லதம்பி மனோகரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் புதல்வன் விபுலசசி சசிப்பிரியன் எழுதிய ‘நிலவின் கர்ப்பங்கள்’ எனும் கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.

சம்மாந்துறை உதவிக்கல்விப்பணிப்பாளர் சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற வெளியீட்டு நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் ஆணையாளரும் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளருமான
எந்திரி.ந.சிவலிங்கம் முதன்மை அதிதியாகவும் கலந்துகொண்டார்.

நிலவின் கர்ப்பங்கள் கவிதைத்தொகுதி அதிதிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.