அம்பாறை சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வீடொன்றில், நேற்று அதிகாலை 3 மணியளவில் உள் நுழைந்த திருடன், வீட்டிலிருந்த பெண்ணை தாக்கிவிட்டு நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கல்முனையில் உள்ள நகைக் கடையொன்றிலிருந்து, நகைளை மீட்டதோடு, சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரையும் கைது செய்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரே இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.