26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை சாய்ந்தமருதில் கடலுக்குள் டிப்பர் வீழ்ந்து விபத்து

அம்பாறை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்துக்கு அருகேயுள்ள கடலுக்குள், டிப்பர் வாகனமொன்று வீழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கற்களை போடும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
கற்களை ஏற்றி இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில்
குடை சாய்ந்து கவிழ்ந்தது.
வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles