அம்பாறை திருக்கோவிலில் பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு கூட்டம் இன்று இடம்பெற்றது. திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பத்மகுமார தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் வீதி விபத்துக்கள், வீதி மறியல் போராட்டங்கள் போதைப் பொருள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் என அனைத்து விதமான குற்றச் செயல்களும் திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படுவதாக திருக்கோவில் பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் தேசப்பிரிய தெரிவித்தார்.
கலந்துரையாடலில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, திருக்கோவில் பிரதேச சபை செயலாளர், திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக
அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், திருக்கோவில் பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக்கள், பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்