அம்பாறை திருக்கோவிலில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

0
115

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், உறுமய காணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநரால் 100 குடும்பங்களுக்கு
காணி உறுதிப்பத்திரங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில், கிழக்கு மாகாண அளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில்,
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மாவட்ட பிரதேச காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள்,
ஆளுநரின் செயலாளர், திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.